ஒரு 'வெண்பா' முயற்சி!
சைதன்யா மீனாக்ஸ் போன்றோரின் வெண்பாக்கள் தந்த ஊக்கத்தால், நானும் இந்த விஷப்பரீட்சையில் இறங்கினேன் :-) அதாவது, அவர்கள் எழுதிய வெண்பாக்களின் வடிவங்களை என்னால் இயன்ற அளவு அப்படியே பிரதியெடுத்து கீழுள்ளவற்றை புனைந்துள்ளேன்! நான் வெண்பா இலக்கணமெல்லாம் மறந்து பலகாலம் ஆகி விட்டது:-( தவறுகள் இருக்கலாம் (இருக்கும்!), தளை தட்டும்! சுட்டிக் காட்டுங்கள், திருத்தி/கற்றுக் கொள்கிறேன்! வெண்பாவைப் பற்றி வினாக்கள் எழுப்புவதை விட, இந்த அப்ரோச் சற்று சுவாரசியமானதல்லவா?
சங்கர மடத்துக்கே தலைவராம் ஜெயேந்திரர்
பங்கமது வந்ததே பேருக்கு - ஆயினும்
சாய்பாபா சங்கதி போலே இதுவும்
போய்விடும் உடைப்பில் பாரு!
ஜங்கிள்க்கு ராசா வீரப்பனை துணிஞ்சு
சிங்கிளா டிரைவராப் போயி - வெளியே
கொணர்ந்த சரவணனை பாராட்டி நிலமும்
பணமும் கொடுத்தார் அம்மா!
தாத்தா கொடுத்த பிரஷரில, எங்கம்மா
காத்தா எடுத்த நடவடிக்கை - அதுலே
பழிக்குத்தான் ஆளாயி செயிலுக்கும் போயி
முழிபிதுங்கிப் போனார் சத்குரு!
என்றென்றும் அன்புடன்
பாலா
1 மறுமொழிகள்:
Jsri,
Is Data on 'thaLai' available somewhere in the WEB? Pl. suggest some book you have read / are aware.
nanRi,
BALA
Post a Comment